×

தினமும் நெல்லிக்காய் சாறு பருகினால் என்ன நன்மை தெரியுமா ? 

 

 ஆயுர்வேத மருத்துவர்கள் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு நெல்லிக்காயில் (முழு நெல்லி)ஆரஞ்சு பழத்தைப் போன்று 20 மடங்கு வைட்டமின் சி சத்து இருக்கிறதாக கூறப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்பட்டு நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் தோலுக்கு நன்மை செய்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) இது ஊக்குவிக்கிறது. எலும்பு உருவாக்கம், மறு உருவாக்கம் ஆகியவற்றுக்கும் இது உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் சாறு பருகலாம் அல்லது ஒரு காயை சாப்பிடலாம்.