×

வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கி டிக் டோக் செய்த மனைவி: தம்பியுடன் சேர்ந்து கொன்று எரித்த கணவன்!

நரசையா கடந்த 14 ஆம் தேதி மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நரசரா பேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தலா சின்ன நரசையா. இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுவர்தா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. டிக் டோக்கில் வீடியோ போடுவதை சுவர்தா வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும்
 

நரசையா  கடந்த 14 ஆம் தேதி மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நரசரா பேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தலா சின்ன நரசையா. இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  சுவர்தா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு  2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

டிக் டோக்கில்  வீடியோ போடுவதை சுவர்தா  வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும்  சுவர்தா டிக் டோக்  செய்வதை நிறுத்தவில்லை. மாறாக மகளுடன் சுவர்தா வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டல் ஒன்றில் தங்கியதோடு அங்கிருந்தும்  டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இதனை கவனித்து வந்த நரசையா  கடந்த 14 ஆம் தேதி மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 

பின்பு நரசையா சகோதரர் சித்தாலா சின்ன வெங்கையாவுடன் சேர்ந்து கடந்த நவம்பர் 17-ம் தேதி சுவர்தாவை கொலை செய்துள்ளார்.  பின்னர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். 

இதையடுத்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்க, அந்த பெண்  அணிந்திருந்த நகைகளை வைத்தே  கொலைசெய்யப்பட்டது  சுவர்தா   என்பது தெரியவந்தது.  இதை தொடர்ந்து போலீசார்,  சகோதரர்கள் இருவரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.