×

வியாபாரிகளே பொருளை சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்ல வேண்டுமா? ‘சேது’ உதவி எண் அறிமுகம்

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ஏதுவான விவரங்களை அறிய ‘சேது’ என்னும் உதவி எண்ணை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. நாளை முதல் இந்த எண்ணை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேது உதவி எண் சேவையை 3 இளம் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை பயிற்சி அதிகாரிகள் நிர்வகிக்கின்றனர். இந்த சேவையின் மூலம் தமிழகம் மற்றும் கேரளம் எல்லைக்குட்பட்ட சரக்கு ரயில்கள்
 

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ஏதுவான விவரங்களை அறிய ‘சேது’ என்னும் உதவி எண்ணை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. நாளை முதல் இந்த எண்ணை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேது உதவி எண் சேவையை 3 இளம் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை  பயிற்சி அதிகாரிகள் நிர்வகிக்கின்றனர். இந்த சேவையின் மூலம் தமிழகம் மற்றும் கேரளம் எல்லைக்குட்பட்ட சரக்கு ரயில்கள் பற்றிய விபரங்கள், குறிப்பிட்ட தேதிகளில் சரக்கு ரயிலில் இடவசதி, ஏற்றிச் செல்லப்படும் பொருள்கள் உட்பட பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்துவதற்கு 90253 42449 என்ற அலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.  இந்த சேவை மே மாதம் 3-ஆம், தேதி வரை மட்டுமே செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.