×

ரயிலில் கூட்டநெரிசலில் பயணித்த இளம்பெண் தவறி விழுந்து பலி!

அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்த மருத்துவர்கள், விபத்தில் ஏற்பட்ட மரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தனர். ஓடும் ரயிலிலிருந்து இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் டோம்பிவ்லி மற்றும் கோபார் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ளூர் ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிப்பது வழக்கம். அந்த வகையில் கிழக்கு டோம்பிவ்லி உள்ள போப்பர் காயான் பகுதியைச் சேர்ந்தவர் சார்மி பிசாத். இவர் தனது அண்ணன் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில்
 

அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்த மருத்துவர்கள், விபத்தில் ஏற்பட்ட மரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தனர்.

ஓடும் ரயிலிலிருந்து இளம்பெண்  ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் டோம்பிவ்லி மற்றும் கோபார் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ளூர் ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிப்பது வழக்கம். அந்த வகையில் கிழக்கு டோம்பிவ்லி உள்ள போப்பர் காயான் பகுதியைச்  சேர்ந்தவர் சார்மி பிசாத். இவர் தனது அண்ணன் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில்  சார்மி பிசாத் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். தலை மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த  அவர் உடனடியாக  டோம்பிவ்லியில் உள்ள சாஸ்திரி நகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்   அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்த மருத்துவர்கள், விபத்தில் ஏற்பட்ட மரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தனர்.

இதுகுறித்து கூறும் சக பயணிகள்,  ‘சார்மி பிசாத் படியில் நின்று பயணித்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் பிடிகொடுத்து நிற்க முடியவில்லை. இதனால் அவர் தவறி விழுந்தார்’ என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.