×

ரயிலில் எந்தெந்த பெர்த்கள் காலி? அறிந்து கொள்ள விரைவில் வருகிறது வசதி

ரயில்களில், ‘ஆன்லைனில்’ டிக்கெட் பதிவு செய்யும்போது காலியாக உள்ள படுக்கை மற்றும் இருக்கைகளை பார்க்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார் புதுதில்லி: ரயில்களில், ‘ஆன்லைனில்’ டிக்கெட் பதிவு செய்யும்போது காலியாக உள்ள படுக்கை மற்றும் இருக்கைகளை பார்க்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். சமீபகாலமாக, ரயில் சேவைகள் மேம்படுத்தப்பட்டு, பயணியருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணத்தின் போது, பயணியரின் தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், ஆன்லைனில்
 

ரயில்களில், ‘ஆன்லைனில்’ டிக்கெட் பதிவு செய்யும்போது காலியாக உள்ள படுக்கை மற்றும் இருக்கைகளை பார்க்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்

புதுதில்லி: ரயில்களில், ‘ஆன்லைனில்’ டிக்கெட் பதிவு செய்யும்போது காலியாக உள்ள படுக்கை மற்றும் இருக்கைகளை பார்க்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

சமீபகாலமாக, ரயில் சேவைகள் மேம்படுத்தப்பட்டு, பயணியருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணத்தின் போது, பயணியரின் தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, காலியாக உள்ள படுக்கை அல்லது இருக்கைகள் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாமே தவிர எத்தனை லோயர் பெர்த், அப்பர் பெர்த், சைடு லோயர், சைடு அப்பர் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை அறிய முடியாது. 

இதனால் மாற்றுத்திறனாளிகள்,  சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து ரயில்களில் காலியாக உள்ள படுக்கை அல்லது இருக்கை வசதிகளை ஆன்லைன் மற்றும் ‘மொபைல் ஆப்’பில் பார்க்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். தற்போது, சினிமா தியேட்டர், தொலை துார பஸ் மற்றும் விமானங்களில், காலி இருக்கைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றபடி, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதுபோன்ற நடைமுறையை ரயில்வேயிலும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.