×

மாப்பிள்ளையின் அப்பாவுடன் ஓடிய மணமகளின் தாய்…பழைய காதலை பிளான் போட்டு கரெக்ட் செய்த கொடுமை!

சுவாதி ஏற்கனவே நண்பர்களாக இருந்த நிலையில் இவர்களுக்கும் இன்னும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவுளி தொழிலதிபர் ராகேஷ். இவரது மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த வைர நகை செய்யும் ஒருவரின் மகளுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அடுத்தமாதம் இவர்களுக்குத் திருமணம் முடிவாகி இருந்தது. இதனிடையே மணமகன்-மணமகள் குடும்பத்தினர் நெருக்கமாகப் பழகியுள்ளனர். இதில் மணமகனின் தந்தை ராகேஷும், மணமகளின் தாயார் சுவாதி ஏற்கனவே நண்பர்களாக இருந்த
 

சுவாதி ஏற்கனவே நண்பர்களாக இருந்த நிலையில் இவர்களுக்கும் இன்னும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத்  கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவுளி தொழிலதிபர்  ராகேஷ். இவரது மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த வைர நகை செய்யும்  ஒருவரின் மகளுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.  அடுத்தமாதம்  இவர்களுக்குத் திருமணம் முடிவாகி இருந்தது. 

இதனிடையே மணமகன்-மணமகள் குடும்பத்தினர் நெருக்கமாகப் பழகியுள்ளனர். இதில் மணமகனின் தந்தை ராகேஷும், மணமகளின் தாயார் சுவாதி ஏற்கனவே நண்பர்களாக இருந்த நிலையில் இவர்களுக்கும் இன்னும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் மணமகனின் தந்தை – மணமகளின் தாய் இருவரையும்  காணவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும்  நிலைமை சங்கடமாகப் போக, திருமணம் நின்றுவிட்டது. இதுகுறித்து இரு வீட்டார் தரப்பிலும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. 

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணமகனின் தந்தை ராகேஷும், மணமகளின் தாயார் சுவாதியும்  ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு முன்பே  இருவரும் நெருக்கமாக  இருந்துள்ளனர். அப்போது தான் சுவாதிக்கு பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த வைர நகை செய்யும் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தங்கள் பிள்ளைகளை  பகடை காயாக பயன்படுத்தி இவர்கள் வீட்டைவிட்டு ஓடியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இந்த கள்ளக்காதல் ஜோடி தலைமறைவாகியுள்ளது . இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.