×

மனைவியை வைத்து சூதாடிய கணவன்: இறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து செய்த கொடூரம்!

பணம் இல்லாததால் மனைவியை வைத்து கணவன் சூதாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் : பணம் இல்லாததால் மனைவியை வைத்து கணவன் சூதாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நண்பர்களுடன் சூதாட்டம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிலேயே சூதாடிய அந்த நபர், பணம் மொத்தத்தையும் இழந்துள்ளார். இதனால் உச்சக்கட்டமாகத் தனது மனைவியைப் பணயமாக வைத்து ஆடியுள்ளார். இதில் தோற்றுப்போக, தன் மனைவியை நண்பர்களிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது உடன் விளையாடிய
 

பணம் இல்லாததால் மனைவியை வைத்து கணவன் சூதாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திர பிரதேசம் : பணம் இல்லாததால் மனைவியை வைத்து கணவன் சூதாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நண்பர்களுடன் சூதாட்டம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிலேயே சூதாடிய அந்த நபர், பணம்  மொத்தத்தையும் இழந்துள்ளார். இதனால் உச்சக்கட்டமாகத் தனது மனைவியைப் பணயமாக வைத்து ஆடியுள்ளார். இதில் தோற்றுப்போக, தன் மனைவியை நண்பர்களிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது உடன் விளையாடிய நண்பர் மற்றும் அவருடைய உறவினர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு அப்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனால் அப்பெண் அங்கிருந்து தப்பித்து தாய் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரை பின்தொடர்ந்து சென்ற அவர்,  அந்த பெண்ணிடம் மன்னிப்பு  கேட்டு அவரைத் திரும்ப அழைத்து வந்துள்ளார். ஆனால் வரும் வழியிலேயே அந்த பெண்ணை நண்பர்களிடம் கொண்டுபோய் விட்டுள்ளார். அந்த பெண்ணை அவர்கள் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் அளிக்க அவர்கள் ஏற்க மறுத்தையடுத்து  நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கணவனே மனைவியை வைத்து சூதாடிய  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.