×

மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு தடபுடலாக திருமணம் நடத்திய தந்தை: மணப்பெண் மட்டும் மிஸ்ஸிங்!?

மன வளர்ச்சி குன்றிய மகன் ஆசைப்பட்டதால் அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபர்காந்தா: மன வளர்ச்சி குன்றிய மகன் ஆசைப்பட்டதால் அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பரோட். மனவளர்ச்சி குன்றிய இவருக்குத் திருமண ஆசை வந்துள்ளது. சமீபத்தில் அஜய்யின் சகோதரனுக்குத் திருமணம் நடந்துள்ளது. அதனால் தனக்கும் இது போன்று திருமணம் நடக்க வேண்டும் என்று
 

மன வளர்ச்சி குன்றிய மகன் ஆசைப்பட்டதால் அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சபர்காந்தா: மன வளர்ச்சி குன்றிய மகன் ஆசைப்பட்டதால் அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பரோட். மனவளர்ச்சி குன்றிய இவருக்குத் திருமண ஆசை வந்துள்ளது. சமீபத்தில் அஜய்யின் சகோதரனுக்குத் திருமணம் நடந்துள்ளது. அதனால் தனக்கும் இது போன்று திருமணம் நடக்க வேண்டும் என்று  எண்ணிய அஜய் தனது விருப்பத்தைத் தந்தையிடம் வெளிப்படுத்தியுள்ளார். 

இதைக் கேட்ட அவரது தந்தை திருமண ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளார். அதன்படி குஜராத் முறைப்படி  மாப்பிள்ளையைக் குதிரையில் அமர வைத்து ஊர்வலமாக வந்துள்ளனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்டிய இந்த திருமணத்தில் அஜய்யின்  உறவினர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  ஆனால்  இந்த திருமணத்தில் மணப்பெண் மட்டும் கிடையாது. 

இது குறித்து கூறியுள்ள அஜய்யின் தந்தை, ‘உறவினர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட அஜய் ஒருநாள் அவன் திருமணம் குறித்து என்னிடம் கேட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனுக்கான பெண்ணை தேடுவதிலும் சிக்கல் இருந்தது. இதனால் என் குடும்பத்தினர் ஒன்று கூடி அஜய்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால்  மணமகள் இல்லாமல் இதை நடத்தி முடித்துள்ளோம். சமூகம் இதைப் பற்றி என்ன பேசும் என்பதில் எங்களுக்குக் கவலையில்லை. என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்ற மகிழ்ச்சி ஒன்றே போதும்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

மகனின் விருப்பத்திற்காகத் தந்தை எடுத்துள்ள இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.