×

மகளுக்கு இந்துமுறைப்படி திருமணம் செய்து வைத்த முஸ்லீம் தம்பதி…குவியும் பாராட்டு!

சொந்த மகளை போல ராஜேஸ்வரியை பார்த்துக்கொண்ட அவர்கள் அவரது இந்து முறைப்படியே அவரை வளர்த்து வந்துள்ளனர். கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கு கதிஜா என்ற மனைவியும் மூன்று மகன்களும் இருந்துள்ளனர். இருப்பினும் அப்துல்லா -கதிஜா தம்பதிக்கு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்துள்ளது. இதனால் அதே பகுதியில் தாய் தந்தையை இழந்து தனியாக வளர்ந்துவந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தனது சொந்த மகளை போல ராஜேஸ்வரியை பார்த்துக்கொண்ட அவர்கள்
 

சொந்த மகளை போல ராஜேஸ்வரியை பார்த்துக்கொண்ட அவர்கள் அவரது இந்து முறைப்படியே அவரை வளர்த்து வந்துள்ளனர். 

கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கு கதிஜா என்ற மனைவியும் மூன்று மகன்களும் இருந்துள்ளனர். இருப்பினும் அப்துல்லா -கதிஜா தம்பதிக்கு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்துள்ளது. இதனால் அதே  பகுதியில் தாய் தந்தையை இழந்து தனியாக வளர்ந்துவந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தனது சொந்த மகளை போல ராஜேஸ்வரியை பார்த்துக்கொண்ட அவர்கள் அவரது இந்து முறைப்படியே அவரை வளர்த்து வந்துள்ளனர். 

இந்நிலையில் 22 வயது நிரம்பிய ராஜேஸ்வரிக்கு கன்ஹன்காட் பகுதியிலுள்ள விஷ்ணு பிரசாத் என்பவரை  வரனாக பார்த்துள்ளார் அப்துல்லா. இதையடுத்து ராஜேஸ்வரிக்கு தங்கள் சொந்த செலவிலேயே இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பகவதி அம்மன் கோயிலில் அந்த இந்த திருமணத்தில்  இந்து மக்களும், முஸ்லிம் மக்களும் ஒருங்கிணைந்து வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

தனது மகள் மாமியார் வீட்டுக்கு சென்றது விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கதிஜா தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரி-விஷ்ணு பிரசாத் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.