×

‘பேஸ்புக் நட்பு’ : நேரில் பார்த்த 4 மணிநேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி!

பேஸ்புக் நட்பு என்பதை தாண்டி ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவரும் சந்திக்கவில்லை. மேற்கு வங்கம்: பேஸ்புக்கில் பழகி நேரில் பார்த்த சில மணிநேரங்களில் இளம்ஜோடி திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப் கோஷல். இவர் சர்வதேச ஆப்டிகல் லென்ஸ் நிறுவனத்தின் குவாலிட்டி பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரித்திமா பானர்ஜி என்பவருடன் பேஸ்புக்கில் கடந்த ஜூலை மாதம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் நட்பு என்பதை தாண்டி
 

பேஸ்புக் நட்பு என்பதை தாண்டி ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவரும் சந்திக்கவில்லை. 

மேற்கு வங்கம்: பேஸ்புக்கில் பழகி நேரில் பார்த்த சில மணிநேரங்களில் இளம்ஜோடி திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப் கோஷல். இவர்  சர்வதேச ஆப்டிகல் லென்ஸ் நிறுவனத்தின் குவாலிட்டி பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரித்திமா பானர்ஜி என்பவருடன் பேஸ்புக்கில் கடந்த ஜூலை மாதம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பேஸ்புக் நட்பு என்பதை தாண்டி ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவரும் சந்திக்கவில்லை. 

இந்நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் துர்கா பூஜை ஒன்றில் சுதிப் கோஷல் மற்றும் பிரித்திமா பானர்ஜி இருவரும் எதர்ச்சையாக சந்தித்துள்ளனர். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சுதிப் கோஷல் பிரித்திமாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். உடனே பிரித்திமாவும் சுதிப் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அடுத்த 4 மணி நேரத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது.