×

புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் – முதல்வர் நாராயணசாமி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம்
 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் வருகிற 23-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொருட்கள் வாங்குபவர்கள் காலை 7 மணி முதல்  இருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 வரை வெளியே வந்து வாங்கி கொள்ளலாம் என முதல்வர் கூறியுள்ளார்.