×

பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை – பிரதமர் அலுவலகம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய
 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற உத்தரவிடக் கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் சுபாங்கர் சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமை சான்றிதழ் குறித்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பிரதமரின் ஆலோசகர் பிரவீன் குமார், “பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை. காரணம் அவர் பிறப்பிலேயே இந்தியர். இந்திய குடியுரிமை சட்டம் 1955 இன் பிரிவு 3 ன் படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன். எனவே அதனை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை” என்று பதிலளித்துள்ளார்.