×

பிணைக்கைதியாக பிடித்து வைத்த சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள் – காஷ்மீரில் அட்டூழியம்

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் : காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிணைக்கைதியாக சிறுவர்கள் காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் முகாமிட்டிருக்கும் தகவலை அறிந்த இந்திய பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிக்கு சென்று தீவிரவாதிகளை தேடி வந்தனர். இதனால் தீவிரவாதிகள் முகாம் இந்தியப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் கலக்கமடைந்த
 

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் :

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பிணைக்கைதியாக சிறுவர்கள் 

காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில்  தீவிரவாதிகள் முகாமிட்டிருக்கும் தகவலை அறிந்த இந்திய பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதிக்கு சென்று தீவிரவாதிகளை தேடி வந்தனர். இதனால் தீவிரவாதிகள் முகாம் இந்தியப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

இதனால் கலக்கமடைந்த தீவிரவாதிகள் சாலையில் அமர்ந்திருந்த இரு சிறுவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். பாதுகாப்பு படையினரை அங்கிருந்து செல்லுமாறு தீவிரவாதிகள் சிறுவர்களைக் காட்டி மிரட்டி உள்ளனர். சிறுவர்களுக்கு அபாயம் ஏற்படாமல் இருக்க இந்திய பாதுகாப்பு படையினர் நிதானமாக  தாக்குதல் உத்திகளை வகுத்துள்ளனர்.

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை 

ஆனால், பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் பாதுகாப்பு படையினரும் சுட்டபடி முன்னேறினர். இந்தத் துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் ஒரு சிறுவனை கொன்றுள்ளனர்.  மற்றொரு சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். சிறுவனைக் கொன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த அலி மற்றும் ஹுபாய்ப் ஆவார்கள்.