×

பாஜக தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதால் எனக்கு அதிருப்தியா? ஹெச்.ராஜா விளக்கம்

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அவருக்குப் பிறகு யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்று கடந்த 4 மாதத்திற்கு மேலாகக் குழப்பம் நிலவி வந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கருத்துக் கேட்கும் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் பா.ஜ.க
 

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அவருக்குப் பிறகு யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்று கடந்த 4 மாதத்திற்கு மேலாகக் குழப்பம் நிலவி வந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கருத்துக் கேட்கும் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், A.P. முருகானந்தம் உள்ளிட்ட நபர்களுள் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக பதவி வகிக்கும் எல்.முருகன் நியமிக்கபட்டுள்ளார் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். 

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “எல்.முருகன் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் பாஜக தமிழகத்தில் புதிய உயரங்களை தொடும். பாரதிய ஜனதா கட்சி மட்டுமே சமூகநீதியை பாதுகாக்கின்ற கட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. முருகன் நியமிக்கப்பட்டதால் எனக்கும் கட்சிக்குள்ளேயும் எந்த சலசலப்பும் இல்லை.

கொள்கை ரீதியாக இருக்கின்ற தொண்டர்கள் பலத்தில் இயங்கும் கட்சி பாஜக. குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கே பாதிப்பு இல்லை. தற்போது நடப்பது ஒரு தேச விரோதமான போராட்டம். குடியுரிமை திருத்த சட்டத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது. அதில் எத்தனை அமலாகியுள்ளது என்பதை ஸ்டாலின் கூறினால் விவாதிக்க தயாராக உள்ளேன்” எனக் கூறினார்.