×

பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த புதுமாப்பிள்ளை: பதறவைக்கும் சம்பவம்!

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். புதுச்சேரி :மனைவியுடன் போனில் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு இவரும் புதுச்சேரியில் வசித்து வந்தனர்.இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மனைவி விரும்பியதை அடுத்து அவரை திருநெல்வேலியில் விட்டுவிட்டுச்
 

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

புதுச்சேரி :மனைவியுடன் போனில் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும்   திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு  திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு இவரும் புதுச்சேரியில் வசித்து வந்தனர்.இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மனைவி விரும்பியதை அடுத்து அவரை திருநெல்வேலியில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார் புருஷோத்தமன். இருப்பினும் கணவனும் மனைவியும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.  

இந்த நிலையில், நேற்றிரவு புருஷோத்தமன் வேலைக்குச் சென்றுவிட்டு வரும்போது இரவு உணவுக்கு பரோட்டா வாங்கி வந்துள்ளார். வழக்கம்போல மனைவியுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. எதிர்முனையில் பேசிய மனைவி தண்ணீர் குடிங்க என்று சொல்ல. பேச்சு சத்தம் இல்லை. இதனால் போனை கட் செய்துவிட்டு மீண்டும் போன் செய்துள்ளார் சண்முகசுந்தரி. ஆனாலும் போனை  எடுக்காததால், சந்தேகமடைந்த அவர் வீட்டின் அருகில் உள்ள உறவினர் ஒருவருக்கு போன் செய்து புருஷோத்தமன் என்னவானார் என்று பார்க்கும்படி கூறியுள்ளார்.

அதன்படி அந்த நபர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, புருஷோத்தமன் மயங்கி கிடந்துள்ளார்.  உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் பரோட்டா தொண்டையில் அடைத்துக் கொண்டதால்தான்   புருஷோத்தமன் உயிரிழந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.