×

பஞ்சாப்பில் பயங்கரம்: ஐந்து வயது மகள் கண் முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியை! 

பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியை ஒருவர் அவருடைய மகள் கண் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கரார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜித் கவுர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி ஆசிரியையாக பணியாற்ற வந்தார். இன்று காலை, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் வாகனத்தை நிறுத்தும்போது, மர்ம நபர் ஒருவன் சரப்ஜித் கவுரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியை
 

பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியை ஒருவர் அவருடைய மகள் கண் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கரார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜித் கவுர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி ஆசிரியையாக பணியாற்ற வந்தார். இன்று காலை, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் வாகனத்தை நிறுத்தும்போது, மர்ம நபர் ஒருவன் சரப்ஜித் கவுரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியை ஒருவர் அவருடைய மகள் கண் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் கரார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜித் கவுர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி ஆசிரியையாக பணியாற்ற வந்தார். இன்று காலை, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் வாகனத்தை நிறுத்தும்போது, மர்ம நபர் ஒருவன் சரப்ஜித் கவுரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இதில், சம்பவ இடத்திலேயே சரப்ஜித் கவுர் உயிரிழந்தார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் அவன் அங்கிருந்து தப்பிவிட்டான். நல்ல வேளையாக குழந்தையை ஒன்றும் செய்யவில்லை. தன்னுடைய கண் முன்னே தாய் சுருண்ட விழுந்ததை அந்த குழந்தையால் உணரக்கூட முடியவில்லை. 

இந்த காட்சி அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஏன் சுட்டுக் கொன்றான், யார் அவன், அவனுக்கும் ஆசிரியைக்கும் முன்விரோதம் ஏதும் இருந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர் காலையிலிருந்து அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் பனி, குளிர் காரணமாக முகத்தை மூடியிருக்கிறான் என்று நினைத்து அவனை விசாரிக்கவில்லை என்றும், இப்படி அநியாயமாக ஆசிரியை கொன்றுவிட்டானே என்றும் குற்றவாளியை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி மற்றும் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொலையாளியை பிடித்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.