×

நித்தியானந்தாவின் தீவிர பக்தர் கழுத்தறுத்து கொலை!

நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் காரணமான இவர் அவர் பெயரில் ஏம்பலம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார். புதுச்சேரி அருகே ஏம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேல். 45 வயதான இவர் நித்தியானந்தாவின் தீவிர பக்தர் ஆவார். புதுச்சேரியில் நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் காரணமான இவர் அவர் பெயரில் ஏம்பலம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார். இந்நிலையில் இதனிடையே நேற்று முன்தினம் இரவு செம்பியப்பாளையத்திலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டு காரில் வீடு
 

நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் காரணமான இவர் அவர் பெயரில் ஏம்பலம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார்.

புதுச்சேரி அருகே ஏம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேல். 45 வயதான இவர் நித்தியானந்தாவின் தீவிர பக்தர் ஆவார். புதுச்சேரியில் நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் காரணமான இவர் அவர் பெயரில் ஏம்பலம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார்.

இந்நிலையில் இதனிடையே நேற்று முன்தினம்  இரவு செம்பியப்பாளையத்திலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டு காரில் வீடு திரும்பிய அவர் வீட்டுக்கு வெகுநேரமாகியும் செல்லவில்லை. அவரது போனும் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அவரது மனைவி வள்ளியம்மாள் மங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  வஜ்ரவேலுவைத் தீவிரமாக தேடிவந்தனர்

இதையடுத்து   நேற்று பாகூர் பகுதியில் வஜ்ரவேலு காரில் கொல்லப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதனால் சம்பவ இடத்துக்கு  சென்ற போலீசார்  வஜ்ரவேலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.