×

திருமணமான பெண்ணின் மிஸ்டுகால் காதல்: முதல் சந்திப்பில் காத்திருந்த அதிர்ச்சி!

அன்று என் வீட்டில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்ல, கணவனிடம் பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டுள்ளார் சுதா கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் சுதா. திருமணமான இவருக்கு செல்போன் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்கு சமீபத்தில் மிஸ்டுகால் மூலம் வாலிபர் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற, கணவனுக்கு தெரியாமல் சுதாவும், வீட்டுக்கு தெரியாமல் அந்த வாலிபரும் உருகி உருகி காதலித்து வந்தனர். இப்படியே போனில் எவ்வளவு நாள் தான் பேசுவது நேரில்
 

அன்று என் வீட்டில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்ல, கணவனிடம் பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டுள்ளார் சுதா

கேரளா மாநிலம் கண்ணூரை  சேர்ந்தவர் சுதா.  திருமணமான இவருக்கு  செல்போன் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்கு சமீபத்தில் மிஸ்டுகால் மூலம் வாலிபர் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற, கணவனுக்கு தெரியாமல் சுதாவும், வீட்டுக்கு தெரியாமல் அந்த வாலிபரும் உருகி உருகி காதலித்து வந்தனர்.

இப்படியே போனில் எவ்வளவு நாள் தான் பேசுவது நேரில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார் அந்த வாலிபர். அதற்கு உடனே சம்மதம் சொன்ன அந்த பெண் அவரிடம் வீட்டின் முகவரியை வாங்கியுள்ளார். மேலும் மறக்காமல் வந்து விடு, அன்று என் வீட்டில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்ல, கணவனிடம் பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டுள்ளார் சுதா.

ஒருகட்டத்தில் வாலிபர் சொன்ன முகவரிக்கு சென்று வாசலில் நின்று அழைக்க, 11 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் வந்துள்ளான். யாருங்க என்ன வேணும் என்று அந்த மாணவன் கேட்க,  என் பெயர் சுதா என்று சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளான் அந்த மாணவன். காரணம் சுதாவை அவன்தான் காதலித்து வந்துள்ளான். அதுவும் அவர் ஒரு பள்ளி மாணவி என்று நினைத்து… பயத்தில் அந்த மாணவன் கூச்சலிட, அங்கு வந்தவர்களிடம் சுதா விஷயத்தை கூறியுள்ளார். உடனே  அவரது கணவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து சுதாவை அவருடன் அனுப்பி வைத்துள்ளனர். தனது அப்பாவின் போன் மூலம் சுதாவை தொடர்பு கொண்டு பேசிவந்த அந்த மாணவனுக்கும் அப்பகுதிவாசிகள்
செம்ம டோஸ் கொடுத்துள்ளார்கள்.