×

தாய்க்கு உணவளிக்க பிச்சை எடுத்து வந்த 6 வயது சிறுமி: நெகிழ்ச்சி சம்பவம்!?

தாயைக் காப்பாற்ற 6 வயது சிறுமி பிச்சை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல்: தாயைக் காப்பாற்ற 6 வயது சிறுமி பிச்சை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் துர்க்காம்மா. இவரது கணவர் வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு துர்க்கம்மாவை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்து போன அவர், மதுவிற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினம்தோறும் கிடைக்கும் பணத்தைக் குடிக்குச் செலவிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில்
 

தாயைக் காப்பாற்ற 6 வயது சிறுமி பிச்சை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொப்பல்: தாயைக் காப்பாற்ற 6 வயது சிறுமி பிச்சை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் துர்க்காம்மா. இவரது கணவர் வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு துர்க்கம்மாவை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்து போன அவர், மதுவிற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினம்தோறும் கிடைக்கும் பணத்தைக் குடிக்குச் செலவிட்டு வந்துள்ளார். 

ஒருகட்டத்தில் தினம்தோறும் குடித்து வந்ததால் துர்க்கம்மாவுக்கு  உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் 6 வயதான துர்க்கம்மாவின் மகள்  பாக்கியலட்சுமி  தனது தாய்க்கு உணவு அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டதால், தினமும் சாலையில் பிச்சை எடுத்து அதில், கிடைக்கும் பணத்தைக் கொண்டு தாய்க்கு உணவு வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

 

இதையடுத்து  சிறுமி பாக்கியலட்சுமி குறித்து குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டதோடு, அவரது தாய்க்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமி பாக்கியலட்சுமி காப்பகம் ஒன்றில் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.