×

தன்னை கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய இளைஞர்: நிலைமையோ பரிதாபம்!

தன்னை கடித்த பாம்பை, பதிலுக்குக் கடித்துத் துப்பிய இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஈட்டா: தன்னை கடித்த பாம்பை, பதிலுக்குக் கடித்துத் துப்பிய இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று மதுபோதையில் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள், விஷ பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அப்போது மதுபோதையில் கிடந்த ராஜ்குமாரை பாம்பு கொத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அந்த பாம்பை
 

தன்னை கடித்த பாம்பை, பதிலுக்குக் கடித்துத் துப்பிய இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

ஈட்டா: தன்னை கடித்த பாம்பை, பதிலுக்குக் கடித்துத் துப்பிய இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று மதுபோதையில் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள், விஷ பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அப்போது மதுபோதையில் கிடந்த ராஜ்குமாரை  பாம்பு கொத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அந்த பாம்பை கையால் பிடித்து எடுத்துக் கடித்துத் துப்பியுள்ளார்.

இதையடுத்து ராஜ்குமார் பாம்பின் விஷம் உடலில் பரவி மயங்கியதாகக் கூறப்படுகிறது. துண்டுதுண்டாக கிடந்த  பாம்பையும் ராஜ்குமாரையும் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.