×

டெல்லியில் போராட்டம்: சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா கைது!

மேலும் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் டெல்லியில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி, கர்நாடகா, பெங்களூர், உத்தரபிரதேசம், ஐதராபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு
 

மேலும் பதற்றத்தைத்  தவிர்க்கும் வகையில் டெல்லியில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.  

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் டெல்லி, கர்நாடகா, பெங்களூர், உத்தரபிரதேசம், ஐதராபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் பதற்றத்தைத்  தவிர்க்கும் வகையில் டெல்லியில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில்  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற  கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் கியது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.