×

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தமிழகத்தை சேர்ந்த 500 பேர் கலந்து கொண்டனர்

டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற 1500 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி: டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற 1500 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 500 பேரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி,
 

டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற 1500 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற 1500 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 500 பேரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடந்த அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தற்போது 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இன்னும் பலரது விவரங்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.