×

சோமேட்டோ மூலம் வங்கியிலிருந்த மொத்த பணத்தையும் இழந்த நபர்! ஆபத்தை ஏற்படுத்திய பேடிஎம்!!

சோமேட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமேட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவை சேர்ந்தவர் விஷ்ணு . இவர் அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சோமேட்டோ செயலி மூலம் 100 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர்
 

சோமேட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோமேட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த நபர் அவரது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை  சேர்ந்தவர் விஷ்ணு . இவர் அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சோமேட்டோ செயலி மூலம் 100 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவு சிறிது நேரத்திலேயே வீடு தேடி வந்தது. ஆனால் உணவு தரம் சரியில்லாததால் அதனை திருப்பிக்கொடுக்க நினைத்தார் விஷ்ணு.  உடனடியாக சோமேட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை விஷ்ணு தொடர்பு கொண்டார். ஆனால் அந்தஅழைப்பை யாரும் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து விஷ்ணுவின் தொலைபேசிக்கு அழைத்த நபர், தான் சோமேடோவிலிருந்து பேசுவதாகவும், உணவை திருப்பி கொடுங்கள் 100 ரூபாய் திருப்பி செலுத்தி விடுகிறோம் அதற்கு நீங்கள் 10 ரூபாய் செலுத்த வேண்டும்  என்றும் கூறியுள்ளார்.

இதனை கண் மூடித்தனமாக நம்பிய விஷ்ணு, அந்த நபர் கூறிய லிங்க்கை கிளிக் செய்து  10 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். சற்று நேரத்தில் அவருடைய வங்கி கணக்கிலிருந்த மொத்த பணமான ரூ .77,000 எடுக்கப்பட்டுள்ளது.பல Paytm பரிவர்த்தனைகள் மூலம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.