செண்டை மேளத்திற்கு நளினமாக ஆடிய கேரள பெண்…வைரல் வீடியோ!
குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த கொண்டாட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த கொண்டாட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனையை தடுக்கவும், அவர்களுக்கு சம உரிமை அளிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கோக்கத்தோடும், அவர்களுக்கு கல்வி உரிமையை வழங்குவதற்காகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது கல்லூரி மாணவி ஒருவர் செண்டை மேளத்தின் ஒலிக்கு ஏற்ப நளினமாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.