×

கொரோனாக்கலாம் நாங்க அஞ்சமாட்டோம்…. மாஸ்க் அணிந்தபடி திருமணம் செய்துகொண்ட ஜோடி!

கொரோனா வைரஸ் அடுத்தவர்களை தொடும் மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் விலையை அதிகப்படுத்தி விற்கின்றனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதையடுத்து பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உங்குட்டூர் பகுதியில் ஒரு தம்பதியினருக்கு கோலாகலமாக
 

கொரோனா வைரஸ் அடுத்தவர்களை தொடும் மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் விலையை அதிகப்படுத்தி விற்கின்றனர்.  கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதையடுத்து பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உங்குட்டூர் பகுதியில் ஒரு தம்பதியினருக்கு கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. அந்த திருமணத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த உறவினர்கள், புரோகிதர், புதுமண தம்பதிகள் உள்ளிட்ட அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாஸ்க் அணிந்து நடைபெற்ற திருமணத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.