×

கையில் காசும் இல்லை; ஆம்புலன்ஸும் இல்லை; 7 வயது மகளின் சடலத்தை வைத்து கொண்டு கதறிய தந்தை!

கையில் பணமில்லாததால் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித்தர வேண்டும் தெலங்கானா: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 7 வயது மகளை அவரது தந்தை கண்ணீருடன் கையில் சுமந்து சென்ற சம்பவம் கண்கலங்க செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய 7 வயது மகள் கோமளா. சிறுமி கோமளாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமியை அவரது தந்தை கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில்
 

கையில் பணமில்லாததால் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித்தர வேண்டும்

தெலங்கானா: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 7 வயது மகளை அவரது தந்தை கண்ணீருடன் கையில்  சுமந்து சென்ற சம்பவம் கண்கலங்க செய்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய 7 வயது மகள்  கோமளா. சிறுமி கோமளாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமியை அவரது தந்தை கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி கோமளா  உயிரிழந்தார்.

கையில் பணமில்லாததால் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித்தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டுக்கொண்டார்.ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் தங்களிடம் இல்லை என தெரிவித்துவிட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த சம்பத் சுமார் இரண்டு மணிநேரம் மருத்துவமனை வாசலில் காத்துக்கிடந்தார். யாரும் உதவிக்கு வராததால் பிறகு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் உதவி கேட்க பலரும் அதை நிராகரித்தனர். பின்னர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவருக்கு உதவ முன்வந்து சொந்த ஊருக்கு அழைத்து சென்றார்.

தெலங்கானா மருத்துவ மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது கவனிக்கத்தக்கது.