×

குடும்ப தகராறில் மாமியார் கையை கடித்த மருமகள்: ஓய்வுபெற்ற காவலருக்கு நேர்ந்த சோகம்!

ஓய்வுபெற்ற பெண் காவல் துணை கண்காணிப்பாளரை அவரது மருமகளான காவல் ஆய்வாளர் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம்: ஓய்வுபெற்ற பெண் காவல் துணை கண்காணிப்பாளரை அவரது மருமகளான காவல் ஆய்வாளர் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் பிரபா சவுகான். இவர் தனது மகனுக்கு ஸ்ரத்தா சிங் என்ற காவல் ஆய்வாளரைத் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து பிரபா சவுகானுக்கும் ஸ்ரத்தா சிங்கும்
 

ஓய்வுபெற்ற பெண் காவல் துணை கண்காணிப்பாளரை அவரது மருமகளான காவல் ஆய்வாளர் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம்: ஓய்வுபெற்ற பெண் காவல் துணை கண்காணிப்பாளரை அவரது மருமகளான காவல் ஆய்வாளர் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் பிரபா சவுகான். இவர்  தனது மகனுக்கு ஸ்ரத்தா சிங் என்ற காவல் ஆய்வாளரைத் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து பிரபா சவுகானுக்கும் ஸ்ரத்தா சிங்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்ரத்தா சிங் கணவருடன் தனிக்குடித்தனம் சென்று விட்டார். 

இந்நிலையில் ஸ்ரத்தா சிங் தனது உறவினர்களுடன் மாமியார் பிரபா சவுகான் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கியுள்ளார். மேலும் பிரபாவின் கையையும் மருமகள் ஸ்ரத்தா  கடித்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக  பிரபா சவுகான் மருமகள் ஸ்ரத்தா சிங் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.