×

காந்தியை சுட்டவர் ஒரு தேசபக்தர்- பாஜக வேட்பாளர்

தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்ட நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்ட நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி
 

தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்ட நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்ட நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என தெரிவித்திருந்தார். கமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டங்கள் எழுந்தன. அதேபோல் சிலர் கமலுக்கு ஆதரவாகவும் பேசினர். கமல் பேச்சுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதனால் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் போபாப் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், “ நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராகவே இருந்தார் தற்போதும் இருக்கிறார். இனியும் தேச பக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்” என தெரிவித்துள்ளார். பிரக்யா சிங்கின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.