×

கலெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை தேடும் 6 வயது சிறுமி-பலாத்காரத்துக்கு கடத்தலா என பரபரப்பு..  

கேரள மாநிலம் கொல்லத்தில் தான்யா மற்றும் பிரதீப் குமாரின் 6 வயது மகள் பொண்ணு என்றழைக்கப்படும் தேவானந்தா நேற்று காலை 11 மணிக்கு வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார் . கேரளாவில் நேற்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அழகான 6 வயது சிறுமி திடீரென்று காணாமல் போனதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது . கேரள மாநிலம் கொல்லத்தில் தான்யா மற்றும் பிரதீப் குமாரின் 6 வயது மகள் பொண்ணு என்றழைக்கப்படும் தேவானந்தா நேற்று காலை 11
 

கேரள மாநிலம் கொல்லத்தில் தான்யா மற்றும் பிரதீப் குமாரின் 6 வயது மகள் பொண்ணு என்றழைக்கப்படும் தேவானந்தா நேற்று   காலை 11 மணிக்கு  வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார் .

கேரளாவில் நேற்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அழகான 6 வயது சிறுமி திடீரென்று காணாமல் போனதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது .

கேரள மாநிலம் கொல்லத்தில் தான்யா மற்றும் பிரதீப் குமாரின் 6 வயது மகள் பொண்ணு என்றழைக்கப்படும் தேவானந்தா நேற்று   காலை 11 மணிக்கு  வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார் .அப்போது அவருடைய தாயும் அருகிலே அவர் விளையாடுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.அப்போது அவரது தாய் வீட்டு வேலைக்காக வீட்டுக்குள் சென்றபோது திடீரென்று சில மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 

 மகளை காணாமல் பதட்டமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர் .போலீசார் விரைந்து வந்து ,அவரை அருகிலுள்ள ஆற்றில் தேடினார்கள்.பிறகு ஒரு மோப்ப நாயை வரவழைத்து தேடினார்கள்,அந்த நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பி வந்தது.
மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன்,இப்பகுதியை பார்வையிட்டு, தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்  .
“குழந்தையை தேடி  ஒரு பெரிய போலீஸ் படையுடன்  வேட்டை நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும்  போலிஸ்  எச்சரித்துள்ளது  அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி தேடுவதாக  ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.