×

கலப்பு கல்யாணம்… 17 வயசு மகளைக் கொன்ற கொடூரம்! 

காதல் என்னவெல்லாம் செய்யும் ? தனக்குப் பிடித்தவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். அப்படி தான் சிறுமி சந்தனா.. ஆமாம்… சிறுமி தான். 17 வயசு பெண்ணான சந்தனா தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் நந்தகுமார் (19) என்பவனை காதலித்து வந்திருக்கிறார். ஆந்திராவில் ரெட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர்களது காதலுக்கு சாதி தடையாய் இருந்து வந்திருக்கிறது. அரசு கல்லூரி ஒன்றில் ஒன்றாக படித்து வந்த இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்துள்ளனர். நாளடைவில் இவர்களின் காதல்,
 

காதல் என்னவெல்லாம் செய்யும் ? தனக்குப் பிடித்தவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். அப்படி தான் சிறுமி சந்தனா.. ஆமாம்… சிறுமி தான். 17 வயசு பெண்ணான சந்தனா தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் நந்தகுமார் (19) என்பவனை காதலித்து வந்திருக்கிறார்.

ஆந்திராவில் ரெட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர்களது காதலுக்கு சாதி தடையாய் இருந்து வந்திருக்கிறது. அரசு கல்லூரி ஒன்றில் ஒன்றாக படித்து வந்த இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்துள்ளனர். நாளடைவில் இவர்களின் காதல், வீட்டிற்கு தெரிந்ததால், சிறுமியின் பெற்றோர், இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். கல்லூரிக்கு அனுப்பினால் தானே காதலிப்பாய் என்று இதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, நண்பர்கள் உதவியுடன், வீட்டை விட்டு வெளியேறி, காதலர்கள் இருவரும், கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். 

காதலர்கள் கல்யாணத்தில் ஒன்று சேர்ந்ததை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை அன்று, சிறுமி தங்கியிருந்த இடத்தை கண்டுப்பிடித்து சென்றனர். இருவரின் பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஊர் பெரியோர், பெண்ணிற்கு திருமண வயது வந்தப்பிறகு பேசிக் கொள்ளலாம் என சமாதானம் பேசி, சிறுமி சந்தனா மற்றும் நந்தகுமாரை அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். 

வீட்டிற்கு திரும்பிய சிறுமி, அன்றிரவே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அதிர்ச்சியளித்தனர் சிறுமியின் பெற்றோர். அதோடு நில்லாமல், போலீசாருக்கும் தகவல் சொல்லாமல், அவசர அவரசரமாக தங்களது நிலத்தில், அவரது உடலை எரித்து, இறுதிச் சடங்குகளையும் செய்தனர். பின்னர், சிறுமியின் உடலின் சாம்பலையும், எலும்புத்துண்டுகளையும் அருகில் உள்ள ஆற்றில் கரைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், சிறுமியை பெற்றோர் கொலை செய்திருக்கக்கூடும் என போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.