கமல்ஹாசன் முதல் உம்மன் சாண்டி வரை- கேரள பெண் 4 நிமிடங்களில் 51 குரல்களில் பேசி மிமிக்ரி- -அகிலாவின் அசாத்திய திறமை …
ஒவ்வொரு நான்கு விநாடிகளுக்கும், அவர் குரல் மாறியது. ஆண் முதல் பெண் வரை, பிரபலமானவர்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் அசாதாரண திறமை கொண்ட அகிலா என்ற இளம் பெண், ஒரு மேடையில் நின்று, நான்கு நிமிடங்களுக்குள் 51 முறை குரலை மாற்றினார். ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோவின் ஒரு பகுதியாக வந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோ வைரலாகிய பின்னர் அகிலா அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
அகிலா ஒரு கேரளா மிமிக்ரி கலைஞர், அவர் பல பிரபலங்களின் குரல்களையும் , பீட்- குத்துச்சண்டை சௌண்டையும் தன் குரல்களில் கொண்டு வருகிறார் .
ஒவ்வொரு நான்கு விநாடிகளுக்கும், அவர் குரல் மாறியது. ஆண் முதல் பெண் வரை, பிரபலமானவர்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் அசாதாரண திறமை கொண்ட அகிலா என்ற இளம் பெண், ஒரு மேடையில் நின்று, நான்கு நிமிடங்களுக்குள் 51 முறை குரலை மாற்றினார். ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோவின் ஒரு பகுதியாக வந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோ வைரலாகிய பின்னர் அகிலா அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
அகிலா ஏ.எஸ் ஆயுர்வேத மருத்துவத்தின் இறுதி ஆண்டு இளநிலை மாணவர். இவர் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்கத்தை சேர்ந்தவர். -முதலில் அவரது பள்ளிக்கூடங்களில் தான் மிமிக்ரி செய்யத் தொடங்கினார். “இன்டர்ஸ்கூல் போட்டிகளில், யாரும் மிமிக்ரியில் பங்கேற்க மாட்டார்கள்,ஏனெனில் நான் படித்தது பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, நான் வித்தியாசமாக மிமிக்ரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன், ”என அகிலா கூறுகிறார்.
கேரளாவின் மிமிக்ரி கலைஞர்கள் பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரபலமடைந்து, அவர்களில் பலர் திரைப்பட நடிகர்களாக ஜொலித்தாலும் , இப்போது சில பெண்கள் இந்தத் துறையில் இறங்கியுள்ளனர்.
“முதலில் நான் செய்தது விலங்கு சத்தங்கள் தான் .என்னோட மிமிக்ரியின் முதல் நபர் பாடகர் ஜானகியம்மாதான், நான் அவருடைய ‘அசகடால்’ பாடலைப் பாடினேன், ”என்கிறார் அகிலா.
பள்ளி நாட்களில் தனது வகுப்பு ஆசிரியர்களின் குரலை பிரதிபலிக்கத் தொடங்கிய இவரின் இந்த அரிய திறமையால் பலரால் பாராட்டப்பட்டார். ஆசிப் அலி மற்றும் தொலைக்காட்சி anchor ரஞ்சினி ஹரிதாஸ் ஆகியோர் அகிலாவின் மிமிக்ரியை வெவ்வேறு இடங்களில் கேட்டிருக்கிறார்கள். “அவர்கள் இருவரும் அதை மிக ரசித்தார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
வைரலாகிய 51-குரல் வீடியோவில் , அவர் பல பிரபலங்கல் குரலில் பேசுகிறார் , ரஞ்சினி முதல் நடிகர் கமல்ஹாசன் வரை பேபி ஷாலினியின் குரல், வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் உம்மன் சாண்டி போன்ற அரசியல்வாதிகள் மற்றும் ‘ஸ்வாசகோஷம்’ கோபன் நாயர் ஆகியோர் குரலுடன் திரையரங்குகளில் காட்டப்படும் புகை எதிர்ப்பு விளம்பரங்களின் குரலிலும் பேசி அசத்துகிறார் அகிலா .