×

‘என் புருஷன் உடலை நான் புதைக்கமாட்டேன்…’ சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி மனைவி பரபரப்பு பேட்டி!

மகபூப் நகர் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும் என்கவுண்டர் இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டுக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு
 

மகபூப் நகர் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும் என்கவுண்டர் இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டுக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதால்  சுட்டுக்கொன்றதாக  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுண்டரில்  சுட்டு கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.

மேலும் நாளைவரை  உடலை பதப்படுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஹைதராபாத் சென்ற 7 பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மகபூப் நகர் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும் என்கவுண்டர் இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் போலீசாரை தாக்கியதாகக் கொல்லப்பட்ட 4 பேர் மீதும் அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து  தெரிவித்துள்ள சென்னகேசவலுவின் மனைவி ரேணுகா, இதுபோன்ற குற்றங்களை செய்த பலர் இன்னும் சிறையிலிருந்து வருகிறார்கள். அதனால் அவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்.

அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்படும்  வரை என் கணவரை நான் புதைக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.