×

ஊரடங்கில் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டுமா.. இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!

வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்டுக் அவரவர் பகுதிகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகள் அதாவது திருமணம், துக்க நிகழ்ச்சி அல்லது உடல்நலக் குறைவு உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு மக்கள் வேறு ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்டுக் அவரவர் பகுதிகளுக்கு
 

வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்டுக் அவரவர் பகுதிகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகள் அதாவது திருமணம், துக்க நிகழ்ச்சி அல்லது உடல்நலக் குறைவு உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு மக்கள் வேறு ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்டுக் அவரவர் பகுதிகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும்  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்ய எண்ணுபவர்கள், இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அரசு விரைவு பேருந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து தொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்ள  94450-14424 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மக்கள் எந்த மாநிலத்துக்கு செல்ல விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றாற்போல பயணம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற்று வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்னர்.