×

ஊரடங்கின்போது மக்களின் பாதுகாப்புக்கு அரசு செய்ய வேண்டிய  10 கடமைகள்! – ப.சிதம்பரம் வெளியிட்ட பட்டியல்

மக்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செய்ய வேண்டிய 10 விஷயங்களைப் பட்டியலிட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார் ப.சிதம்பரம். அதில் அவர் கூறியிருப்பதாவது: மக்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செய்ய வேண்டிய 10 விஷயங்களைப் பட்டியலிட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார் ப.சிதம்பரம். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க
 

மக்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செய்ய வேண்டிய 10 விஷயங்களைப் பட்டியலிட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார் ப.சிதம்பரம். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மக்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செய்ய வேண்டிய 10 விஷயங்களைப் பட்டியலிட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார் ப.சிதம்பரம். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் இதோ: 
1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடன் வழங்க வேண்டும்.
2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயியின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.
3. மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ 3,000  உடன் வழங்க வேண்டும்.
5. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்.

6. ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளயோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.
7. மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
8. எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.
9. வங்கிகள் எந்த ஒரு இ.எம்.ஐ வசூலையும் ஜூன் 30 வரை மேற்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும்.
10. அனைத்து வித பொருட்கள், சேவைகள் மீதான ஜி.எஸ்.டி-ஐ ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்துக்கு 5 சதவிகிதம் குறைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.