×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது!

தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா மற்றும் டெல்லி என இருவர் கொரோனா வைரஸுக்கு பலியான நிலையில் நேற்று மகாராஷ்டிராவை சேர்ந்த 64 வயதான முதியவர் ஒருவர் பலியாகினார் இதன்
 

தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகா மற்றும் டெல்லி  என இருவர் கொரோனா வைரஸுக்கு பலியான நிலையில் நேற்று மகாராஷ்டிராவை சேர்ந்த  64 வயதான முதியவர் ஒருவர் பலியாகினார்  இதன் மூலம் இந்தியாவில்  கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக   மகாராஷ்டிராவில் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதில் 14 பேர் குணமாகியுள்ளனர்.