×

இந்தியாவில் கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்வு!

இதுவரை உலகம் முழுவதும் 55லட்சத்து 84 ஆயிரத்து 211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 47ஆயிரத்து 614 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 23 லட்சத்து 61 ஆயிரத்து 092 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும்
 

இதுவரை உலகம் முழுவதும் 55லட்சத்து 84 ஆயிரத்து 211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 47ஆயிரத்து 614 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 23 லட்சத்து 61 ஆயிரத்து 092 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,38,845 லிருந்து 1,45,380 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 60,491 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,167 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் 50,667 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 15,786ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,695 ஆக அதிகரித்துள்ளது.