×

“இந்த கடன்காரன் பண்ண வேலைய பாருங்க”-குடும்பத்தையே கொலை பண்ணியவருக்கு வலை..  

மத்திய அசாம் மாவட்டத்தில் கலியாபோர் அருகே உள்ள சில்காட் பகுதியில் கடன் பிரச்சினையால் ஜெயந்த குமார் பார்மன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களைக் கொன்றார். நல்பரி மாவட்டத்தில் முகல்முவா பகுதியைச் சேர்ந்த ஜெயந்த குமார் பார்மன் சில்காட் பகுதியில் அமைந்துள்ள அசாம் கூட்டுறவு சணல் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றினார், அவர் தனது குடும்பத்துடன் சணல் ஆலையில் கால் பங்கில் வசித்து வந்தார். அவர் சரியாக வேலைக்கு போகாமல் குடி மற்றும் சூதாட்டம் போன்ற
 

மத்திய அசாம் மாவட்டத்தில் கலியாபோர் அருகே உள்ள சில்காட் பகுதியில் கடன் பிரச்சினையால் ஜெயந்த குமார் பார்மன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று  மகள்களைக் கொன்றார்.
 நல்பரி மாவட்டத்தில் முகல்முவா பகுதியைச் சேர்ந்த ஜெயந்த குமார் பார்மன் சில்காட் பகுதியில் அமைந்துள்ள அசாம் கூட்டுறவு சணல் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றினார், அவர் தனது குடும்பத்துடன் சணல் ஆலையில் கால் பங்கில் வசித்து வந்தார்.

அவர் சரியாக வேலைக்கு போகாமல் குடி மற்றும் சூதாட்டம் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபட்டதால் நிறைய கடன் வாங்கினார். மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டார். அதனால் அவர் தனது குடுமபத்தினர் அனைவரையும் கொலை செய்தார். 
அவர் தன்னுடைய மனைவி  37 வயது பஜாவந்தி பார்மன், மகள்களான 12 வயது நிகிதா பார்மன், 10 வயது பாஸ்வதி பார்மன் மற்றும் 6 வயது நிபிடிதா பார்மன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

சில உள்ளூர்வாசிகள் அவரின் குடும்பம் வசித்து வந்த வீட்டிற்க்குள் சென்று,  இறந்த சடலங்களைக் கண்டறிந்து உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீஸ் வீட்டிலிருந்து சடலங்களை  மீட்டு, சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். குற்றவாளியையை வலைவீசி தேடிவருகின்றனர்.