×

ஆர்டர் பண்ணது பிரியாணி… வந்தது சாம்பார் சாதம்… அப்பிடியே 50000 ரூபாயும் அபேஸ்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து 50 ஆயிரம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து 50 ஆயிரம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ரஹ்மத் நகரைச் சேர்ந்த என்ஜினீயர் ஸொமாட்டோவில் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி சாப்பிட ஆசையாக காத்திருந்தவருக்கு வந்தது சாம்பார் சாதம்.
 

ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து 50 ஆயிரம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து 50 ஆயிரம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ரஹ்மத் நகரைச் சேர்ந்த என்ஜினீயர் ஸொமாட்டோவில் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
பிரியாணி  சாப்பிட ஆசையாக  காத்திருந்தவருக்கு வந்தது சாம்பார் சாதம். இதனால்  எரிச்சலடைந்த அவர், ஸொமாட்டோவின் கஸ்டமர் கேர் எண்ணை கூகிளில் தேடி எடுத்து கால் செய்துள்ளார்.

எதிரே பேசியவர் ஸொமாட்டோவின் வாடிக்கையாளர் மைய அதிகாரியைப் போலவே நம்பும் படி பேசியுள்ளார். தன் பணம் திரும்ப வேண்டும் என்று முறையிடவே, எதிரே பேசியவர் “உங்கள் பணத்தை நான் திருப்பி தருகிறேன் என்றும், உங்கள் தொலைபேசிக்கு தற்போது ஒரு கியூ.ஆர் கோடு வரும், அதை ஸ்கேன் செய்தால் உடனே பணம் வந்துவிடும்” என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சாப்ட்வேர் என்ஜினீயர்அந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளார். ஸ்கேன்  செய்த  அடுத்த நொடியே அவருக்கு ஒரு  அதிர்ச்சி  செய்தி  வந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. இதனால் பதறிப்போன அவர் ஹைதராபாத் சைபர் கிரைம் உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடிவருகின்றனர். மேலும், இதுகுறித்து பதிலளித்துள்ள ஸொமாட்டோ நிறுவனம்,  அவர் தொடர்பு கொண்டது எங்களின் கஸ்டமர் கேர் சேவை எண் கிடையாது. எங்கள் நிறுவனத்துக்கு ஆன்லைன் சாட் மற்றும் மெயில் சேவையில் மட்டுமே தொடர்புகொள்ள முடியும் கூறியுள்ளனர். இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம், வாடிக்கையாளர்கள் தான் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளது.