ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது!
போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார். இதனையறிந்து அங்குவந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் பிரச்சாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தெலுங்குதேச கட்சியினரும் விமான நிலையம் முன்பு திரண்டனர். இதனையடுத்து இருதரப்பினருக்குமிடையில் எந்த வன்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது எனபதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் போராட்டம் நடத்த தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தெலுங்குதேச கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.