×

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பினரயிக்கு திருமண நாளில் பிறந்த ஆண் குழந்தை: நெகிழ்ச்சி சம்பவம்!

தெலங்கானா: தெலங்கானாவில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பினரயிக்கு அவரது திருமண நாளில் ஆண் குழந்தை பிறந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். அம்ருதாவின் தந்தை மாருதிராவ், ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரிய வர, பிரச்னை வெடித்தது. பிரனய், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் தந்தை மாருதிராவ்
 

தெலங்கானா: தெலங்கானாவில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பினரயிக்கு அவரது திருமண நாளில் ஆண் குழந்தை பிறந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். அம்ருதாவின் தந்தை மாருதிராவ், ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரிய வர, பிரச்னை வெடித்தது. பிரனய், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்ருதாவிடம் பிரனய் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி மிரட்டினார்.

இதையடுத்து பிரனய் – அம்ருதா, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த அம்ருதாவும் பிரனய்யும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது,  அம்ருதவின் தந்தை ஏவிய மர்மநபர் பிரனய்யை வெட்டிக் கொலைசெய்தார். அந்தச் சம்பவம், சிசிடிவி காட்சியில் பதிவானது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது கணவர் வீட்டில் வசித்து வந்த அமிர்தாவுக்கு கடந்த 24 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்று தான் பிரனய்- அம்ருதாவின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தாயும் சேயும் நலமுடன் இருந்தாலும் மாருதி ராவ் ஆட்களால் ஆபத்து நேரிடலாம் என்பதால்,  பிரனய்யின் தந்தை போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.