×

‘நான் பிரதமர் ஆபிஸின் ஆலோசகர்..’ போலி அடையாள அட்டையுடன் பிரபல ஹோட்டலில் ரூம் கேட்ட இளைஞர் கைது!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருக்கும் ஐடிசி கார்டெனியா தனியார் ஹோட்டலுக்கு அன்கித் டே (22) என்னும் இளைஞர் சென்றுள்ளார். அவர், தான் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றுவதாகவும் தனக்கு ஒரு ரூம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனைக் கேட்டு கொண்ட ஊழியர்கள், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ஹோட்டலுக்கு சென்ற போலீசார், பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு அந்த இளைஞரை குறித்து விசாரணை செய்துள்ளனர்.
 

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருக்கும் ஐடிசி கார்டெனியா தனியார் ஹோட்டலுக்கு அன்கித் டே (22) என்னும் இளைஞர் சென்றுள்ளார். அவர், தான் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றுவதாகவும் தனக்கு ஒரு ரூம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனைக் கேட்டு கொண்ட ஊழியர்கள், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் ஹோட்டலுக்கு சென்ற போலீசார், பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு அந்த இளைஞரை குறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது, அப்படி யாரும் அங்கு பணிபுரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது விடுதி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கைது அவரிடம் இருந்த போலி அடையாள அட்டை, விசிட்டிங் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.