ஊரடங்கால் வேலையை இழந்த இளம்பெண்கள் : பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட கொடுமை!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-கோரடி சாலையில் விஜயானந்த் சொசைட்டியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர் ஒருவர் அந்த வீட்டிற்கு மப்டியில் சென்று பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தபின் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், அந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம்பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதுகுறித்த விசாரணையில் கைதான பெண்களில் ஒருவர் குஜராத் தொழிற்சாலையில் ஆடை வடிவமைப்பாளராக இருந்ததும், மற்றொரு பெண் மருத்துவமனையில் பரிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் வேலையை இழந்துள்ளனர். இதனால் குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழிலுக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.