×

உறுதியளித்த படி ராஜினாமா செய்துள்ளேன் – எடியூரப்பா பரபரப்பு பேட்டி!

பாஜக மேலிடத்திடம் உறுதியளித்ததன் படி 2 ஆண்டுகள் பதவி வகித்துவிட்டு ராஜினாமா செய்துவிட்டேன் என எடியூரப்பா தெரிவித்தார். கர்நாடக மாநில முதலமைச்சரான எடியூரப்பா பாஜக மேலிட உத்தரவின் படி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். முதல்வர் பதவியில் தொடர வேண்டுமென மடாதிபதிகள் வலியுறுத்தியும் எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளார். பாஜகவில் 75 வயதை எட்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம். அதனடிப்படையில் எடியூரப்பாவை ராஜினாமா செய்ய பாஜக மேலிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படி
 

பாஜக மேலிடத்திடம் உறுதியளித்ததன் படி 2 ஆண்டுகள் பதவி வகித்துவிட்டு ராஜினாமா செய்துவிட்டேன் என எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடக மாநில முதலமைச்சரான எடியூரப்பா பாஜக மேலிட உத்தரவின் படி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். முதல்வர் பதவியில் தொடர வேண்டுமென மடாதிபதிகள் வலியுறுத்தியும் எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளார். பாஜகவில் 75 வயதை எட்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம். அதனடிப்படையில் எடியூரப்பாவை ராஜினாமா செய்ய பாஜக மேலிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் படி எடியூரப்பா அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழாவான இன்று, தான் ராஜினாமா செய்வதாக அறிவித்த பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் தவார் சந்த் கெலாட்டிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மேலிடத்திற்கு உறுதி அளித்ததன் படி இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன். முதல்வர் பதவியிலிருந்து விலக கட்சி மேலிடம் எந்த நெருக்கடியும் தரவில்லை என்றார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.