×

கத்தியுடன் சென்ற மச்சினி -குறுக்கே வந்த மைத்துனர் -அடுத்து குடும்ப சண்டையில் நடந்த கொடூரம் .

ஒரு குடும்ப சண்டையில் ஒரு பெண் தனது மைத்துனரை குத்தி கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் . ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பாண்டா மண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஃபரியா என்ற பெண் தனது கணவர் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுடன் வசித்து வந்தார். ஃபரியாவின் மூத்த மைத்துனர் மொஹ்சீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது . இரண்டு மைத்துனர்களும் எப்போதும் அடிக்கடி ஒருவரையொருவர்
 

ஒரு குடும்ப சண்டையில் ஒரு பெண் தனது மைத்துனரை குத்தி கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் .

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பாண்டா மண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  ஃபரியா என்ற பெண் தனது கணவர் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுடன்  வசித்து வந்தார். ஃபரியாவின் மூத்த மைத்துனர் மொஹ்சீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது . இரண்டு மைத்துனர்களும் எப்போதும்  அடிக்கடி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு வாழ்ந்தனர்.

இந்நிலையில் ,மே 9 அன்று, ஃபரியாவின் கணவர் ஷாருக் தனது சகோதரர் மொஹ்சீனுக்கு பால்  கிண்ணத்தை கொடுக்கச் சொன்னார் . அப்போது  அவரது மைத்துனர் கிண்ணத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.

உடனே  ஃபரியா  அவர்களின் அறைக்குள் சென்று  அந்த  பாத்திரத்தை தூக்கி எறிந்தார்.

இதனால் இரண்டு மைத்துனர்களுக்கிடையில் ஒரு சூடான வாக்குவாதம் ஏற்பட்டது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டை போட்டனர்

அப்போது மொஹ்சீன் குறுக்கே புகுந்து அவர்களின் சண்டையை நிறுத்த முயன்றார், அப்போது  ஃபரியா ஒரு கத்தியை எடுத்து அவரின் வயிற்றில் குத்தினார்

அதனால் கடுமையான  காயத்துடன், மொஹ்சீன் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் .

இதைத் தொடர்ந்து, அந்த பெண் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.