×

பெண்களை பிக் அப் பண்ணும் மகன் -தூது செல்லும் தாய் -இருவரும் சேர்ந்து செய்த புது டெக்னீக் மோசடி .

ஒரு தாயும் மகனும் சேர்ந்து நூதனமான முறையில் பல பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்ததை போலீசார் கண்டறிந்தனர் தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் வசிக்கும் 45 வயதான தாயும் அவரின் 20 வயதான மகனும் வசித்து வந்தனர் .இந்த இருவரும் சேர்ந்து பல மோசடிகள் செய்ததை சமீபத்தில் போலீசார் கண்டுபிடித்தனர் . அதன் படி அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பல பெண்களிடம் நூதனமான முறையில் ஏமாற்றி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை ஆட்டைய போட்டதை போலிசார்
 

ஒரு தாயும் மகனும் சேர்ந்து நூதனமான முறையில் பல பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்ததை போலீசார் கண்டறிந்தனர்

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் வசிக்கும் 45 வயதான தாயும் அவரின் 20 வயதான  மகனும் வசித்து வந்தனர் .இந்த இருவரும் சேர்ந்து பல மோசடிகள் செய்ததை சமீபத்தில் போலீசார் கண்டுபிடித்தனர் .

அதன் படி அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பல பெண்களிடம் நூதனமான முறையில் ஏமாற்றி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை ஆட்டைய போட்டதை  போலிசார்  கண்டறிந்துள்ளனர் .

இவர்களிடம் பாதிக்க பட்ட பெண் சமீபத்தில் போலீசில்  கொடுத்த புகாரில், இவர்களின் மோசடி அம்பலமானது அதன் படி முதலில் அந்த வாலிபரின் தாய் ஒரு பெண்ணை கன்டுபிடித்து கொடுப்பார் .பிறகு அந்த பெண்ணை அவரின் மகன் பிக் அப் பண்ணுவார் .அதன் பிறகு அந்த வாலிபரின் தாய் அந்த பெண்ணிடம் சென்று பேச்சு வார்த்தை நடந்துவது போல சென்று அவரிடமிருந்தும், அவரின்  வீட்டிலிருந்தும் பல நகைகள் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து வருவார் .

இதே போல் அந்த தாயும் மகனும் சேர்ந்து பல பெண்களிடம் இப்படி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது .பின்னர் போலீசார் அந்த குற்றவாளிகள் சாந்தி தேவி (45), அவரது மகன் பிரவீன் (20) என்று கண்டுபிடித்தனர் . பிறகு மேற்கு டெல்லியின் ரகு பிர்நகரில் உள்ள அவர்களது வீட்டில் காவல்துறையினர் முறையான சோதனைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்தனர்.