×

ஊர் மக்கள் முன்னால் நிர்வாணமாக துரத்தப்பட்ட பெண் -புகாரை வாங்க மறுத்த போலீஸ் -ஊடகத்தில் வைரலாகும் வீடியோ ..

நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் வடமாநிலங்களில் அரங்கேறி வருகிறது என்பதற்கு பின் வரும் சம்பவம் ஒரு உதாரணம் . பீகார் மாநிலம் முசாபர்நகரின் ஆந்திரதி கிராமத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது பெண்னை ஒரு சாதாரண பிரச்சினைக்காக ஊர் மக்கள் முன்னால் நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது . முசாபர்நகரின் ஆந்திரதி கிராமத்தில் அங்கன்வாடி ஊழியரான லீலாவுக்கும் ,ஒரு பெண்ணுக்கும் இடையே சிறிய பிரச்சினை வந்துள்ளது .இதனால்
 

நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் வடமாநிலங்களில் அரங்கேறி வருகிறது என்பதற்கு பின் வரும் சம்பவம் ஒரு உதாரணம் .
பீகார் மாநிலம் முசாபர்நகரின் ஆந்திரதி கிராமத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது பெண்னை ஒரு சாதாரண பிரச்சினைக்காக ஊர் மக்கள் முன்னால் நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது .

முசாபர்நகரின் ஆந்திரதி கிராமத்தில் அங்கன்வாடி ஊழியரான லீலாவுக்கும் ,ஒரு பெண்ணுக்கும் இடையே சிறிய பிரச்சினை வந்துள்ளது .இதனால் லீலா தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணின் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக ஊர் மக்கள் முன்னால் துரத்தப்பட்டார் .இந்த சம்பவத்தை ஊரே கூடி வேடிக்கை பார்த்துள்ளது .இதை பலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அப்படி தூக்கி வீசப்பட்ட அந்த பெண் காவல் அதிகாரிகளிடம் புகாரளித்தபோது அவர்களும் அதை வாங்க மறுத்து ,கொடுமை படுத்தியுள்ளனர் .

போலீசிடம் அந்த பெண் புகாரளித்ததும் கோபமடைந்த லீலாவும் அவரின் குழுவினரும் அவரை மேலும் ஊர்மக்கள் முன்னிலையில் தாக்க தொடங்கினர் .இந்த சம்பவத்தில் 13 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறினார் .இதில் முக்கிய குற்றவாளிகள் அங்கன்வாடி தொழிலாளி லீலா தேவி என்றும் அவரது கணவர் மோதி மெஹ்தோ என்றும் அவர் மேலும் கூறினார் .