×

கணவனை பிரிந்த பெண் -வலைவிரித்த சாமியார் -இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தன்னிடம் வந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து பணம் பறித்ததாக ஒரு சாமியார் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள வடாஜ் பகுதியில் வசிக்கும் 29 வயதான ஒரு பெண் மருந்தாளர் தன்னுடைய கணவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார் .அதனால் அவர் தனிமையில் இருந்தததால் மீண்டும் அவரின் கணவரோடு சேர்ந்து வாழ விரும்பினார் .அதற்காக அவர் அதே பகுதியில் உள்ள வாகெலா என்ற சாமியாரின் உதவியை நாடினார் .அந்த சாமியாரிடம் அவர் தன்னுடைய
 


தன்னிடம் வந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து பணம் பறித்ததாக ஒரு சாமியார் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.


குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள வடாஜ் பகுதியில் வசிக்கும் 29 வயதான ஒரு பெண் மருந்தாளர் தன்னுடைய கணவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார் .அதனால் அவர் தனிமையில் இருந்தததால் மீண்டும் அவரின் கணவரோடு சேர்ந்து வாழ விரும்பினார் .அதற்காக அவர் அதே பகுதியில் உள்ள வாகெலா என்ற சாமியாரின் உதவியை நாடினார் .அந்த சாமியாரிடம் அவர் தன்னுடைய கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமென்ற ஆசையை கூறினார் .அதற்காக அவரிடம் ஏதாவது செய்து தன்னுடைய கணவரின் மனதை மாற்றுமாறு கூறினார் .
அதை கேட்ட சாமியார் அந்த பெண்ணை தன்னுடைய வலையில் விழவைக்க திட்டம் போட்டார் .அதனால் அந்த பெண்ணிடம் சில மந்திர பூஜைகள் செய்வதாக கூறி அவரிடமிருந்து 2.50 லட்சம் ரூபாய் பணம் பறித்து கொண்டார் .பிறகு அவரை பல ஹொட்டல்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் ,அந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்து கொண்டு அந்த பெண்ணை பலமுறை மிரட்டி பணமும் ,கற்பையும் பறித்து கொண்டார் .
அதனால் அந்த பெண் அந்த சாமியாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் மார்ச் 5ம் தேதியன்று தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் .அதன் பிறகு அந்த பெண் சிகிச்சை பெற்று மீண்டு வந்ததும் சாமியார் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்