×

“இரண்டு பெண்களுடன் திருமணம்” : கணவரை கும்மியெடுத்த மனைவிகள்!

இரு பெண்களை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த நபரை இரண்டு மனைவிகளும் அடித்து துவைத்த சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெமுலா பரசுரம். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பரசுராம் ஆழ்துளை கிணறு துளையிடும் வண்டி வைத்துள்ளதால் அவர் வேலைக்கு சென்றுவிட்டு வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வந்துள்ளார்.சில நாட்கள் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறி செல்லும் பரசுராம் சில மாதங்கள் கழித்து வருவது வழக்கமானதாக மாறியுள்ளது.
 

இரு பெண்களை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த நபரை இரண்டு மனைவிகளும் அடித்து துவைத்த சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெமுலா பரசுரம். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பரசுராம் ஆழ்துளை கிணறு துளையிடும் வண்டி வைத்துள்ளதால் அவர் வேலைக்கு சென்றுவிட்டு வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வந்துள்ளார்.
சில நாட்கள் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறி செல்லும் பரசுராம் சில மாதங்கள் கழித்து வருவது வழக்கமானதாக மாறியுள்ளது. இதனால் கணவர் பரசுராம் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய பரசுராமன் மீண்டும் வேலைக்கு செல்ல இருக்கிறேன் என்றும் நீண்ட நாட்கள் கழித்துதான் வருவேன் என்று கூறியுள்ளார் . இதனால் மனைவிக்கு சந்தேகம் வலுக்க அவரை பின்தொடர்ந்து சென்று உள்ளார். அப்போதுதான் பரசுராம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து பரசுராமின் முதல் மனைவி, இரண்டாவது மனைவி இருக்கும் வீட்டுக்குள் நுழைந்து கணவரை அடித்துள்ளார். அப்போது இரண்டாவது மனைவியையும் அடிக்க செல்ல, இவருக்குத் திருமணம் ஆனது எனக்கு தெரியாது என்று கூறி இரண்டாவது மனைவி அழுதுள்ளார்.

இதன் பிறகுதான் அவர் இரண்டு பெண்களையும் ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் இரண்டு மனைவிகளும் சேர்ந்து பரசுராமை கடுமையாகத் தாக்கினர். அத்துடன் இதுகுறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரசுராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.