×

மேற்கு வங்க ரயில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு!

 

மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டம் பங்சிடவா பகுதியில் கஞ்சன்ஜங்கா  பயணிகள் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்தது.  காயம் அடைந்தவர்கள் வடக்கு பெங்கால் மருத்துவக் கல்லூரியில் அனுமதிகப்பட்டுள்ளனர்.  அத்துடன் நியூ ஜல்பைகுரியில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பான விவரங்களை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.   சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 

“எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. 

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.