×

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயல்பட வட்டாட்சியர் பாலராஜூ நாகராஜூ, ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் கையூட்டு கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த தெலங்கானா மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், யாருக்கும் தெரியாமல் நாகராஜூவின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது நாகராஜூ தனது வீட்டில் ரியல்
 

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயல்பட வட்டாட்சியர் பாலராஜூ நாகராஜூ, ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் கையூட்டு கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த தெலங்கானா மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், யாருக்கும் தெரியாமல் நாகராஜூவின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது நாகராஜூ தனது வீட்டில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை கையூட்டாக கொடுக்க முயன்றபோது அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

அவருடன் கிராம நிர்வாக அலுவலர் சாய்ராஜ் என்பவரையும் பிடித்து வைத்து விசாரித்து வருகின்றனர். கையூட்டாக வாங்கிய தொகை அதிகம் என்பதால், இயந்திரத்தை வைத்து பணத்தை எண்ணி வருகின்றனர். இதற்கு முன்னரும் கூட லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார் நாகராஜூ கைது செய்யப்பட்டவர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.